மத்​திய அமைச்​சர் ஜெய்சங்கர் 3 நாள் ரஷ்யா​ பயணம்

புதுடெல்லி: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதன் மூலம் உக்​ரைன் மீதான போரை இந்​தியா ஊக்​கு​விப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். எனவே, கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​தா​விட்​டால் இந்​திய பொருட்​களுக்கு ஏற்​கெனவே உள்ள 25% வரி​யுடன் கூடு​தலாக 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். ஆனால், இதை ஏற்க இந்​தியா மறுத்​து​விட்​டது.

இதனிடையே, ரஷ்​யா​வுட​னான உறவை மேலும் வலுப்​படுத்த இந்​தியா முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது. இம்​மாத தொடக்​கத்​தில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்று அந்​நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார்.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் விரை​வில் இந்​தி​யா​வுக்கு வரு​வார் என தோவல் தெரி​வித்​தார். இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் 3 நாள் பயண​மாக நேற்று ரஷ்​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மன்ட்​டுரோவ் அழைப்​பின் பேரில் வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் 3 நாள் பயண​மாக 19-ம் தேதி ரஷ்யா செல்​கிறார்.

அங்கு 20-ம் தேதி (இன்​று) நடை​பெறும் வர்த்​தகம், பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் கலாச்​சார ஒத்​துழைப்பு மீதான இந்​தி​யா-ரஷ்யா அரசுகள் ஆணை​யத்​தின் 26-வது கூட்​டத்​துக்கு அவர் இணை தலைமை தாங்​கு​கிறார். மேலும் இந்​தி​யா-ரஷ்யா வர்த்தக மன்ற கூட்​டத்​தி​லும் ஜெய்​சங்​கர் உரையாற்ற உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.