சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின் நடவடிக்கை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்க படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் […]