ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று 2-வது நாளாக நடந்​தது. அப்​போது நடந்த வாதம்:

மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா: ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர்கள் ஒப்​புதல் அளிக்​கலாம், மறுக்​கலாம், குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரைக்​கலாம் அல்​லது திருப்பி அனுப்​பலாம் என 4 வாய்ப்​பு​கள் உள்​ளன. அந்த மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​க​வில்லை என்​றால், அவை காலா​வதி ஆகி​விட்​ட​தாகவே கருத வேண்​டும்.

நீதிப​தி​கள்: அப்​படி​யென்​றால் மொத்த அதி​கார​மும் ஆளுநருக்​குத்​தான் உள்​ளது என்​பது​போல உள்​ளது. அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது.

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்​தால், அதுகுறித்த தகவலை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்​கலாம். அதே​நேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்​புதல் அளிக்​காமல் நீண்​ட​கால​மாக கிடப்​பில் போட்டு வைக்க முடி​யாது. இவ்​வாறு ஒப்​புதல் அளிக்​காமல் இருப்​பது தற்​காலிக​மான​தா, நிரந்​தர​மானதா என்​பதே இந்த விவாதத்​தின் முக்​கிய கருப்​பொருள்.

சொலிசிட்​டர் ஜெனரல்: ஆளுநர் ஒன்​றும் நீட்​டிய இடங்​களில் கண்​களை மூடிக்​கொண்டு கையெழுத்து போடும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் மூல​மாக தேர்வு செய்​யப்​படும் குடியரசுத் தலை​வர் மூல​மாகவே ஆளுநரும் நியமிக்​கப்​படு​கிறார். அப்​படி​யென்​றால் இது​வும் ஒரு​வகை​யில் ஜனநாயகத்​தின் வெளிப்​பாடே.

அரசி​யல், பொதுப் பணி​யில் அனுபவம் பெற்​றவர்​களே ஆளுந​ராக நியமிக்​கப்​படு​கின்​றனர். ஒப்​புதலுக்கு அனுப்​பப்​படும் மசோதா ஒரு​வரது அடிப்​படை உரிமை​களை பறிக்​கும் வகை​யில் இருந்​தால் அதற்கு ஒப்​புதல் அளிக்​காமல் இருக்​கும் சுய​விருப்​புரிமை அதி​காரத்தை ஆளுநர் அபூர்​வ​மாக பயன்​படுத்த முடி​யும்.

நீதிப​தி​கள்: மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுப்பு தெரி​விப்​ப​தற்கு பதிலாக, அதில் திருத்​தங்​களை மேற்​கொள்ள பரிந்துரைக்கலாம். ஒரு​வேளை ஒப்​புதல் அளிக்​காமல் போனால் மாநில அரசு அவரை அணுகி அந்த மசோ​தாவை திருப்பி அனுப்பி வைக்க கோரலாம்.

ஒரு மசோதா முதல்​முறை​யாக ஒப்​புதலுக்கு வந்​தால், அதை ஆளுநர் மறுக்​கவோ, திருப்பி அனுப்​பவோ முடி​யும். ஆனால், மறுநிறைவேற்​றம் செய்து அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட முடி​யாது. ஆளுநர், பேர​வைக்​கான அதி​காரம் இரண்​டும் பலனற்​றுப் போகும் வகை​யில் செயல்​படக் கூடாது.

தலைமை நீதிபதி கவாய்: அரசி​யல் சாசன சட்​டத்​துக்​கான விளக்​கம் எப்​போதும் ஒரே நிலைப்​பாட்டை கொண்​டிருக்க முடி​யாது. குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர்​கள், பேர​வைத் தலை​வர்​கள் ஆகியோரின் செயல்​பாடு​களை பொருத்து மாறும்.

ஆளுநர்​கள் ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான கால நிர்​ண​யம் கடந்த காலங்​களில் இல்​லை​தான். அதனால் என்ன பயன் கிடைத்​தது. அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போலத்​தான். இவ்​வாறு கூறிய நீதிப​தி, வி​சா​ரணை​யை இன்​றைக்​கு (ஆக.21) தள்​ளி வைத்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.