மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்: போலீஸார் தீவிர விசாரணை

புதுடெல்லி: மத்​தி​ய பிரதேச மாநிலம் ரீவா​வில் உள்ள கோர்கி கிராமத்​தில் பழமை​யான காஜி மியான் தர்கா உள்​ளது. குர் காவல் நிலைய பகு​தி​யில் அமைந்​துள்ள இந்த தர்கா​வுக்​குள் அடை​யாளம் தெரி​யாத ஒரு கும்​பல் இரவு நேரத்​தில் புகுந்​துள்​ளது. உள்ளே இருந்த தர்​கா​வின் மஸார் எனும் சமா​தியை கும்​பல் சேதப்​படுத்​தி​விட்டுச் சென்​றுள்​ளது.

மறு​நாள் காலை தர்கா சேதம் அடைந்​துள்​ளதை பார்த்து உள்​ளூர் முஸ்​லிம்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதனால் அப்​பகு​தி​யில் பதற்​றம் ஏற்​பட்​டது.

உள்​ளூர் மக்​கள் பலர் குர் காவல் நிலை​யத்​தில் கூடி உடனடி​யாக நடவடிக்கை எடுக்க கோரினர். உத்தர பிரதேசத்தை அடுத்து பாஜக ஆளும் ம.பி.​யிலும் முஸ்​லிம்​களின் மதத் தலங்​கள் குறிவைக்​கப்​படு​வ​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

ரீவா தர்கா சேதம் குறித்து அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து குற்​ற​வாளி​களை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

இதுகுறித்து ரீவா உதவி ஆட்​சி​யர் அனு​ராக் திவாரி கூறும்​போது, ‘‘தர்கா சேதத்​துக்கு பின் நிலை​மையை அறிந்து உடனடி​யாக நடவடிக்கை எடுத்​த​தால் அமைதி திரும்​பி​யுள்​ளது. தர்​கா​வில் சேதம் அடைந்த பகு​தி​கள் அப்​பகு​தி​யினர் ஆதர​வுடன் சரிசெய்​யப்​படு​கின்​றன.

தற்​போது நிலைமை கட்​டுப்​பாட்​டில் உள்​ளது’’ என்​றார். இதனிடையே, ரீவா தர்​காவை சேதப்​படுத்​திய காட்சிப் பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன. இதையடுத்​து, தர்​காவை சுற்றி பலத்த போலீஸ்​ பாது​காப்​பு போடப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.