அவசரநிலை காலத்தில் நாட்டில் 1.07 கோடி பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு

புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையி​லான அவசரநிலை காலத்​தில் அப்​போதைய இந்​திரா காந்தி அரசின் அத்​து​மீறல்​கள், முறை​கேடு​கள் குறித்து நீதிபதி ஷா ஆணை​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. அதன் அறிக்கை நாடாளு​மன்​றத்​தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்​கல் செய்​யப்​பட்​டது.

குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்தை அமல்​படுத்​தி​ய​தில் பலத்தை பிரயோகித்​தது குறித்​தும் அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான விவரத்தை மக்​களவை​யில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் பகிர்ந்து கொண்​டார்.

இது தொடர்​பாக அவர் எழுத்​து​மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: அவசரநிலை காலத்​தில் 1.07 கோடிக்​கும் மேற்​பட்​டோருக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது, இது அப்​போதைய இந்​திரா காந்தி அரசு நிர்​ண​யித்த இலக்கை விட 60% அதி​க​மாகும்.

அப்​போது குடும்​பக் கட்​டுப்​பாடு தொடர்​பாக 1,774 பேர் இறந்​துள்​ளனர். திரு​மண​மா​காதவர்​களுக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு செய்​யப்​பட்​ட​தாக 548 புகார்​கள் வந்​துள்​ளன.

அவசரநிலை காலத்​தில் குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்​துக்கு ஆண்டு இலக்​கு​களை மாநிலங்​களுக்கு மத்​திய அரசு நிர்​ண​யித்​தது. 1975-76-ல் 24.8 லட்​சம் அறுவை சிகிச்​சைக்கு இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

ஆனால் 5.6% கூடு​தலாக, அதாவது 26.2 லட்​சம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது. இது​போல் 1976-77-ல் 42.5 லட்​சம் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டு, 91% அதி​க​மாக (81.3 லட்​சம்) அறுவை சிகிச்​சைகள் செய்​யப்​பட்​டன. இவ்​​வாறு அமைச்​சர்​ தனது பதிலில்​ கூறியுள்ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.