டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது.

தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்- ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டிஜிபிக்​கள் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அபய்​கு​மார் சிங், வன்​னிய பெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட​ராமன், வினித்​தேவ் வான்​கடே என அடுத்​தடுத்து பட்​டியலி்ல் உள்​ளனர்.

வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​கும். அதில், 3 பேர் பட்​டியலை ஆணை​யம் தமிழக அரசுக்கு மீண்​டும் அனுப்​பும். அதில், ஒரு​வரை தமிழக அரசு புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும். இது​தான் நடை​முறை. ஆனால், இந்த முறை அப்​படி 8 பேரின் பட்​டியல் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட​வில்​லை.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் 8 மாதங்​களில் நடை​பெற உள்ள நிலை​யில், தமிழக அரசு தங்​களுக்கு சாதக​மானவர் இருக்க வேண்​டும் என விரும்​புவ​தால் புதிய டிஜிபி நியமனத்தை விரும்​ப​வில்லை என கூறப்​படு​கிறது. அதற்கு ஏது​வாக தற்​போதைய டிஜிபி சங்​கர் ஜிவாலுக்கு பணிநீட்​டிப்பு வழங்​கப்​படும் என முதலில் கூறப்​பட்​டது. ஆனால், அவர் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறு​வது உறுதி ஆகி​விட்​டது.

அடுத்த கட்​ட​மாக பிரமோத்​கு​மாருக்கு இன்​னும் ஒரு மாதமே பதவிக்​காலம் உள்​ளது. அடுத்​த​தாக சீமா அகர்​வால், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகியோரில் ஒரு​வர் நியமிக்​கப்​படலாம் என பேசப்​பட்​டது. ஆனால், இந்த நடை​முறை​யும் தொடங்​கப்​பட​வில்​லை. மேலும், லஞ்ச ஒழிப்​புத்​துறை டிஜிபி​யாக உள்ள அபய்​கு​மார் சிங் பொறுப்பு டிஜிபி​யாகலாம் எனவும் கூறப்​பட்​டது. ஆனால், அதி​லும் முடிவு எட்​டப்​பட​வில்​லை.

இது ஒரு​புறமிருக்க சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில், சட்​டம்- ஒழுங்கு டிஜிபி விவ​காரத்​தில் ‘பணி நீட்​டிப்பு வழங்​கக் கூடாது, பொறுப்பு டிஜிபி நியமிக்க கூடாது’ என வழக்கு தொடரப்​பட்​டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு புதிய டிஜிபி நியமன நடை​முறை​கள் நடந்து வரு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

அதே​நேரம் புதிய டிஜிபி நியமிக்​கும் வரை பொறுப்பு டிஜிபியை நியமிக்​கும் முடி​வில் தமிழக அரசு உள்​ள​தாக​வும், அது​வும் இணக்​க​மாக உள்ள நிர்​வாகப் பிரிவு டிஜிபி​யான வெங்​கட​ராமன் நியமிக்​கப்பட உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. அது​வும் 3 முதல் 6 மாதத்​துக்கு பின்​னர் தேர்​தல் நடை​முறை அமலுக்கு வரும் என்​ப​தால், தேர்​தல் ஆணை​யம் யாரை​யா​வது ஒரு​வரை சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும். அது​வரை இதை தொடரலாம் எனவும்​ தமிழக அரசு விரும்​புவ​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.