எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்​தவர் பிரமானந்த் குப்​தா. இவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்றி வந்​தார். இவருடைய மனை​விக்​கும் வேறு குடும்​பத்தை சேர்ந்த 2 சகோ​தரர்​களுக்​கும் இடை​யில் சொத்து தொடர்​பான பிரச்​சினை இருந்து வந்​துள்​ளது. இந்​நிலை​யில், பட்​டியலினத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோ​தரர்​கள் மீது பாலியல் வன்​கொடுமை வழக்கு தொடுத்​தார். அவர் சார்​பில் பிர​மானந்த் குப்தா வாதாடி​னார்.

முன்​ன​தாக பெண்​ணின் புகார் குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிர​மானந்த் குப்தா போலி​யாக பாலியல் வன்​கொடுமை வழக்கு பதிவு செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மேலும், 2 சகோ​தரர்​கள் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படும் இடத்​தில் அந்த நேரத்​தில் சம்​பந்​தப்​பட்ட பெண் இல்லை என்​பதும் உறு​திப்​படுத்​தப்​பட்​டது.

இந்த வழக்கு லக்​னோ​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டது. நீதி​மன்​றத்​தில் அரசு சிறப்பு வழக்​கறிஞர் அரவிந்த் மிஸ்ரா வாதிடு​கை​யில், ‘‘வழக்​கறிஞர் குப்தா ஏற்​கெனவே போலி வழக்கு தொடுத்த குற்​றத்​துக்​காக ஒரு மாதம் சிறை தண்​டனை அனுப​வித்​துள்​ளார்.

எதிர்​தரப்​பினரை சித்​ர​வதை செய்ய வேண்​டும் என்ற உள்​நோக்​கத்​துடன் பட்​டியலினத்தை சேர்ந்த பெண்​ணுடன் கூட்டு சேர்ந்து அவர் தொடர்ந்து போலி பாலியல் வழக்​கு​களை தொடுத்து வந்​துள்​ளார். இது​போல் குப்தா போலி​யாக 18 வழக்​கு​களும் சம்​பந்​தப்​பட்ட பெண் 11 வழக்​கு​களும் தொடுத்​துள்​ளனர். அவை போலி​யானவை.” என்​றார்.

அனைத்து தரப்பு வாதங்​களும் முடிந்த நிலை​யில், சிறப்பு நீதி​மன்​றம் அளித்த தீர்ப்​பில் கூறியிருப்பதாவது: போலி வழக்​கு​கள் பதிவு செய்து வந்த வழக்​கறிஞர் குப்​தாவுக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​படு​கிறது. வழக்​கறிஞர் குப்தா தன்னை தவறாக வழிநடத்​தி​ய​தாக கூறிய​தால், சம்​பந்​தப்​பட்ட பெண்ணை இந்த நீதி​மன்​றம் கடுமை​யாக எச்​சரித்து விடுவிக்​கிறது.

எஸ்​சி, எஸ்டி சட்​டத்​தின் கீழ் எதிர்​காலத்​தில் இது​போல் போலி வழக்​கு​களை தொடுத்​தது தெரிய வந்​தால், அந்த பெண் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், வழக்​கறிஞர் குப்தா நீதி​மன்​றத்​துக்​குள் நுழைய தடை விதிக்​கப்​படு​கிறது.

அவர் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​ற​வும் தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு நகலை உத்தர பிரதேச மாநிலம் அலகா​பாத் பார் கவுன்​சிலுக்கு அனுப்பி வைக்க வேண்​டும். அதே​போல் லக்னோ போலீஸ் ஆணை​யருக்​கும் நீதி​மன்ற தீர்ப்​பின் நகலைஅனுப்பி வைக்க வேண்​டும்.

எஸ்​சி, எஸ்சி சட்​டத்​தின் கீழ் எந்த பெண்​ணாவது பாலியல், கூட்டு பாலியல் தொடர்​பாக புகார் கொடுத்​தால், சம்​பந்​தப்​பட்ட பெண் வேறு எங்​காவது பாலியல் புகார் கொடுத்​திருக்​கிறா​ரா, தொடர்ந்து பாலியல் புகார் கொடுத்​திருக்​கிறாரா என்​பதை ஆணை​யர் விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு சிறப்​பு நீதி​மன்​றம்​ தீர்​ப்​பளித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.