தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பள்ளிக்கல்வித் துறை சாதனைகள் குறித்து அரசு பெருமிதம்

சென்னை: எண்​ணும் எழுத்​தும் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் தேசி​யள​வில் பள்​ளிக்​கல்​வி​யில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கென பிரத்யேக மாநிலக் கல்விக்​கொள்கை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இது சமத்​து​வ​மான, குழந்​தைகளை எதிர்​காலத்​துக்கு தயார்ப்படுத்​தும் சிறந்த கல்வி முறைக்​கான திட்ட வரைவை அடிப்​படை​யாக கொண்​டுள்​ளது.

கரோனா கால கற்​றல் இடைவெளியை சரிசெய்​வதற்​காக இல்​லம் தேடிக் கல்​வித் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு 2021-22-ம் கல்​வி​யாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்​கீடு செய்து 1.65 லட்​சம் தன்​னார்​வலர்​கள் மூலம் 34 லட்​சம் மாணவர்​கள் பயன்​பெற்​றுள்​ளனர். அரசுப் பள்​ளி​களில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்கு முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

2024–25-ம் கல்​வி​யாண்டு முதல் 17.53 லட்​சம் குழந்​தைகள் பயன்​பெறுகின்​றனர். தொடக்​கப் பள்​ளி​களில் பயிலும் குழந்​தைகளிடம் அடிப்​படைக் கல்​வியறிவு, எண்​ணறிவை மேம்​படுத்த ‘எண்​ணும் எழுத்​தும்’ திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 25.08 லட்​சம் மாணவர்​கள் பயனடைகின்​றனர்.

அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாற்​றுத்​திறன் மாணவர்​களை அடை​யாளம் கண்டு சிறப்​புக் கல்வி வழங்க நலம் நாடி செயலி பயன்​படுத்​தப்​படு​கிறது. பள்​ளி​யிலேயே 76 லட்​சத்து 56,074 மாணவர்​களுக்கு ஆதார் புதுப்​பித்​தல் மற்​றும் புதிய ஆதார் பதிவு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. 28,067 அரசுப் பள்​ளி​களில் 100 எம்​பிபிஎஸ் வேகத்​தில் இணை​ய​வசதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள பள்​ளி​களில் இணைய சேவை ஏற்​படுத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதுத​விர அரசுப் பள்​ளி​களில் பயிலும் 16 லட்​சத்து 77,043 மாணவர்​கள் பயனடை​யும் வகை​யில் ரூ.455 கோடி​யில் 22,931 திறன்​மிகு வகுப்​பறை​கள் (Smart Classroom) அமைக்​கப்​பட்​டுள்​ளன. 79,723 இடைநிலை ஆசிரியர்​களுக்கு ரூ.81 கோடி​யில் கையடக்​கக் கணினிகள் (Tablet) தரப்​பட்​டுள்​ளன. 11, 12-ம் வகுப்​புக்​கான தொழிற்​கல்​விப் பாடத்​திட்​டம் சீரமைக்​கப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களிடம் அறி​வியல் ஆர்​வத்தை தூண்​டும் வகை​யில் நடமாடும் அறி​வியல் ஆய்​வகத் திட்​டம் (வான​வில் மன்​றம்) ரூ.11.69 கோடி​யில் 33.50 லட்​சம் பேர் பயன்​பெறும் வகை​யில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

பள்ளி மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​ கீழ் 2022-23 மற்​றும் 2023-24-ம் கல்​வி​யாண்​டு​களில் 614 உயர்​நிலை, மேல்​நிலை பள்​ளி​களுக்கு ரூ.1087.76 கோடி​யும், 2,455 தொடக்க மற்​றும் நடுநிலைப் பள்​ளி​களுக்கு ரூ.800 கோடி​யும் நிதி ஒதுக்​கப்​பட்​டு, வகுப்​பறைக் கட்டங்கள், ஆய்​வகங்​கள் மற்​றும் கழிப்​பறை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

இதுத​விர 2024–25-ல் 440 உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் உட்​கட்​டமைப்பு வசதி​கள் ஏற்​படுத்த ரூ.745 கோடி​யும், பராமரிப்பு பணிக்கு ரூ.200 கோடி​யும் 526 தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் உட்​கட்​டமைப்பு வசதி​கள் ஏற்​படுத்த ரூ.284 கோடி​யும் ஒதுக்​கப்​பட்டு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

தற்​போது 2025-26-ம் கல்​வி​யாண்​டில் 567 உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் உட்​கட்​டமைப்பு வசதி​கள் ஏற்​படுத்த ரூ.734.55 கோடியும் பராமரிப்பு பணி​களுக்​கென ரூ.200 கோடி​யும் 182 தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் உட்​கட்​டமைப்பு வசதி​கள் ஏற்படுத்த ரூ.110.71 கோடி​யும் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இக்காரணங்களால்​ சிறந்​த தர​மான பள்​ளிக்​கல்​வியை வழங்​கு​வ​தில்​ தேசி​யள​வில்​ தமிழகம்​ சிறந்​து விளங்​கு​கிறது. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.