மக்களின் வாக்குகளை பறிக்க விடமாட்டேன்: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அணி கூட்​டம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் தலை​வரும் மேற்கு வங்க முதல்​வரு​மான மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது: நாடு முழு​வ​தி​லுமிருந்து 500-க்​கும் மேற்​பட்ட குழுக்​களை மேற்கு வங்​கத்​தில் பாஜக பணி​யில் அமர்த்​தி​யுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர்​களை நீக்​கு​வதை நோக்​க​மாக கொண்டு கணக்​கெடுப்​பு​களை நடத்​துகிறது.

உங்​கள் பெயர் வாக்​காளர் பட்​டியலில் உள்​ளதா என்​பதை சரி​பார்க்க வேண்​டும். உங்​களிடம் ஆதார் அட்டை கட்​டா​யம் இருக்க வேண்​டும். நான் உயிருடன் இருக்​கும் வரை மக்​களின் வாக்​குரிமையை பறிக்க எவரை​யும் அனு​ம​திக்க மாட்​டேன்.இவ்​வாறு மம்​தா கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.