காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம் தேதி எஸ்​சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்​டலுக்கு புறப்​பட்​டார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை​யும் அவர் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் ஹோட்​டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்​க​வில்​லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் காரில் ரகசிய ஆலோ​சனை நடத்​தினர். இந்த பேச்​சு​வார்த்தை உலக நாடு​களின் கவனத்தை ஈர்த்து உள்​ளன.

இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் கடந்த 3-ம் தேதி நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது பிரதமர் மோடி​யுடன் காரில் பேசி​யது என்ன என்று நிருபர்​கள் அவரிடம் கேள்வி எழுப்​பினர். இதற்கு புதின் பதில் அளித்​த​போது, “உக்​ரைன் போர் தொடர்​பாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அலாஸ்​கா​வின் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினேன். இது தொடர்​பான விவரங்​களை பிரதமர் மோடி​யுடன் பகிர்ந்து கொண்​டேன்” என்றார்.

அதிபர் புதின் மேலும் கூறிய​தாவது: இந்​தி​யா, சீனா, ரஷ்யா ஆகியவை நெருங்​கிய கூட்​டாளி​கள். இந்த 3 நாடு​களில் கோடிக்​கணக்​கான மக்​கள் வசிக்​கின்​றனர். எங்​களது பொருளா​தா​ரம் மிக​வும் வலு​வாக இருக்​கிறது. எங்​களை யாராலும் மிரட்ட முடி​யாது, தண்​டிக்​க​வும் முடி​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது நட்பு நாடு​களு​டன் மோதல் போக்கை கடைபிடிக்​கக்​கூ​டாது. மிரட்​டும் தொனி​யில் பேசக்​கூ​டாது. வரி​வி​திப்பு மூலம் இந்​தி​யா, சீனாவை யாராலும் மிரட்ட முடி​யாது. அதிபர் ட்ரம்​பின் சொல்​லுக்கு இந்​திய, சீன தலை​வர்​கள் கட்​டுப்பட மாட்​டார்​கள்.

ரஷ்​யா, உக்​ரைன் இடையே 3 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. நிலங்​களை ஆக்​கிரமிக்​கும் நோக்​கில் இந்த போர் நடை​பெற​வில்​லை. கிரிமி​யா, டோன்​ஸ்க், லுகான்​ஸ்க், கேர்​சன் உள்​ளிட்ட பகு​தி​களில் ரஷ்ய மொழி பேசும் மக்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். ரஷ்​யா​வுடன் இணைய அவர்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக தீர்​மான​மும் நிறைவேற்றி உள்​ளனர். அந்த பகுதி மக்​களின் விருப்​பத்​துக்கு மதிப்​பளிக்க வேண்​டும். இது​தான் ஜனநாயகம்.

உக்​ரைன் போர் தொடர்​பாக ட்ரம்​புடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினேன். இருண்ட குகை​யில் கடைசி​யில் வெளிச்​சம் தெரிவது போன்று தெரி​கிறது. அமைதிப் பேச்​சு​வார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி மாஸ்​கோவுக்கு வரலாம். அவரை வரவேற்க நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம்.

ட்ரம்ப் உடனான பேச்​சு​வார்த்​தை​யின்​போது நிலங்​களை பறி​மாற்​றம் செய்​வது தொடர்​பாக எது​வும் பேச​வில்​லை. போர் தொடர்​பான முக்​கிய விவ​காரங்​கள் குறித்து மட்​டுமே பேசினோம். உக்​ரைனுடன் சுமுக தீர்வு எட்​டப்​ப​டா​விட்​டால் ரஷ்யா தொடர்ந்து ராணுவ நடவடிக்​கையை மேற்​கொள்​ளும். பின்​வாங்​கும் பேச்​சுக்கே இடமில்​லை. இவ்​​வாறு புதின்​ தெரிவித்​​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.