ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்​பதை ஒரு நாடு 9 வரி​கள் என மாற்​றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்​றும் 0.25%, 1.5%, 3% மற்​றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்​களும் அடங்​கும். 2019 மற்​றும் 2024 தேர்​தல் அறிக்​கை​யில் எளிமை​யான ஜிஎஸ்டி 2.0-ஐ காங்​கிரஸ் கோரி​யிருந்​தது.

மொத்த ஜிஎஸ்​டி​யில் மூன்​றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்​றும் நடுத்தர வர்க்​கத்​தினரின் பைகளில் இருந்து வரு​கிறது. ஆனால், கோடீஸ்​வரர்​களிட​மிருந்து 3% வரி மட்​டுமே வசூலிக்​கப்​படு​கிறது.

அதே​நேரம், அவர்​களுக்கு சாதக​மாக கார்ப்​பரேட் வரி விகிதம் 30%-லிருந்து 22-ஆக குறைக்​கப்​பட்​டது. 8 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளது. இது ஒரு நல்ல விஷ​யம். அதே​நேரம், ஜிஎஸ்டி குறைப்​பால் வரு​வாய் இழப்பு ஏற்படும் மாநிலங்​களுக்கு அந்த இழப்பை மத்​திய அரசு 5 ஆண்​டு​களுக்கு ஈடு செய்ய வேண்​டும்” என்றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.