வேலூர் காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: கிண்டியில் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்​னை, கிண்டி காந்​தி​ மண்டப வளாகத்​தில் புதி​தாக நிறு​வப்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீராங்​கனை ராணி வேலு நாச்​சி​யார் உரு​வச்​சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்​சி​யகத்​துக்கு வேலு​நாச்​சி​யார் பெயர் சூட்​டப்​படும் என்​றும் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: மன்​னர் செல்​ல​முத்து விஜயரகு​நாத சேதுபதி – முத்​தாத்​தாள் நாச்​சி​யார் தம்​ப​தி​யரின் மகளாக 1730-ம் ஆண்டு பிறந்​தார் வீரமங்கை ராணி வேலு​நாச்​சி​யார். 1746-ம் ஆண்டு சிவகங்கை மன்​னர் முத்​து​வடு​க​நாதரை மணந்​து, சிவகங்கை சமஸ்​தானத்​தின் ராணி​யா​னார். 1772-ம் ஆண்டு ஆங்​கிலேயர் சிவகங்​கை​யின் மீது போர் தொடுத்த போது, மன்​னர் முத்​து​வடு​க​நாதர் வீர மரணமடைந்​தார்.

பின்​னர், வேலு​நாச்​சி​யார், மைசூர் மன்​னர் ஹைதர் அலி, திப்பு சுல்​தான் மற்​றும் அக்​காலத்​தில் திண்​டுக்​கல் பகு​தியைஆண்ட கோபால் நாயக்​கர் ஆகியோர் உதவி​யுடன் ஆங்​கிலேயர்​களு​டன் போரிட்டு வென்று சிவகங்கைச் சீமையை 1780-ம் ஆண்டு மீட்​டார். அதன்​பின், 16 ஆண்​டு​கள் சிவகங்​கைச் சீமை​யைச் சிறப்​பாக ஆட்சி செய்​தார். ஆங்​கிலேயர்​களை எதிர்த்த “முதல் இந்​திய விடு​தலைப் பெண் போராளி” வீரமங்கை வேலு​நாச்​சி​யார் 1796 டிசம்​பர் 25ம் தேதி மறைந்​தார்.

வேலு​நாச்​சி​யாரின் வீரத்தை வருங்​காலத் தலை​முறை​யினர் அறிந்து போற்​றும் வகை​யில், சென்​னை கிண்​டி காந்தி மண்டப வளாகத்​தில் அரசின் சார்​பில் ரூ.50 லட்​சம் செல​வில் புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள வேலு​நாச்​சி​யார் சிலையை நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். நிகழ்ச்​சி​யில்​,துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்​, அமைச்​சர்​கள் மு.பெ. சாமி​நாதன், மா. சுப்​பிரமணி​யன், எம்​.பி. டி.ஆர்​.​பாலு உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

முதல்வர் அறி​விப்பு: சிலை திறப்பு தொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​பதிவில், ‘‘இந்​தி​யா​வின் விடு​தலைக்​காகப் போராடிய முதல் பெண் போராளி – ஆங்​கிலேயர்​களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலு​நாச்​சி​யாரின் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் திறந்து வைத்​தேன். இந்த மகிழ்ச்​சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்​சிப் பள்​ளிக்கு வீரமங்கை வேலு​நாச்​சி​யார் பெயர் சூட்​டப்​படும். மண் – மானம் காக்​கப் புயலெனப் புறப்​பட்ட வீரத்​தாய் வேலு​நாச்​சி​யாரின் வரலாறும், அவருக்​குத் துணை நின்ற மருது சகோ​தரர்​கள் உள்​ளிட்ட தீரமிக்க தமிழர்​களின் வரலாறும், இந்த மண் யாருக்​கும் தலைகுனி​யாது எனும் வரலாற்றை உரக்​கச் சொல்​லும்” என தெரி​வித்​துள்​ளார்.

சிவகங்கை சமஸ்தானம் நன்றிசிவகங்கை சமஸ்​தானம் தேவஸ்​தானம் பரம்​பரை அறங்​காவலர் ராணி டிஎஸ்​கே.மது​ராந்​தகி நாச்​சி​யார், வேலு​நாச்​சி​யார் சிலை திறப்​புக்​காக முதல்​வருக்கு நன்றி தெரி​வித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.