தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்: கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம்

புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்​டிகையமுன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக சுமார் 12,000 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்​திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும்.

இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும். இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும்.

செப்​டம்​பர் 23-ம் தேதி செவ்​வாய்க்​கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​ பட்​டுள்​ளன. தேவை​யின் அடிப்​படை​யில் படிப்​படி​யாக கூடு​தல் ரயில்​கள் அறிவிக்​கப்​படும். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29-ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் தயார் நிலை​யில் உள்​ளது. இதன் மற்​றொரு ரயில் அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் அறி​முகப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

கூடு​தலாக 1.5 கோடி பேர் பயணிக்​கும் வகை​யில்​ கடந்த ஆண்டு பண்​டிகை காலத்​தில் 7,724 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்​கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.