நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை

புதுடெல்லி: வட மாநிலங்​களில் நவராத்​திரி நாட்​களில் கர்​பா, தாண்​டியா எனும் கோலாட்​டங்​கள் நடை​பெறு​வது வழக்​கம். உத்​தர பிரதேசம், மத்​தி​ய பிரதேசம், ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) தேசிய செய்​தித் தொடர்​பாளர் ராஜ் நாயர் வெளி​யிட்ட அறி​விப்​பில், “கர்பா என்​பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழி​பாட்​டின் ஒரு வடிவம். சிலை வழி​பாட்​டில் நம்​பிக்கை இல்​லாதவர்​கள் இவற்​றில் பங்​கேற்க உரிமை இல்​லை. இது​போன்ற நிகழ்​வு​களில் இந்​துக்​கள் அல்​லாதோர் இருப்​பது எங்​கள் மத உணர்​வு​களை புண்​படுத்​துகிறது” என்று கூறி​யுள்​ளார்.

விஎச்​பி​யின் உ.பி. மாநில செய்​தித் தொடர்​பாளர் வினோத் பன்​சால் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இந்து சமூகம் விழிப்​புடன் உள்​ளது. கர்​பா, தாண்​டியா நடன கூட்​டங்​களில் ஊடுருவுபவர்​கள் லவ் ஜிஹாத், மதமாற்​றம் போன்ற சதித் திட்​டங்​களுக்கு முயற்​சிக்​கின்​றனர். இது தொடர்​பாக இந்​துக்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். உள்ளே நுழைபவர்​களின் ஆதார் உள்​ளிட்ட அடை​யாள அட்​டைகளை சரி​பார்ப்​பதுடன், நெற்​றி​யில் தில​கம் பூச வேண்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

ராஜஸ்​தானில் ஆணுக்​கும், பெண்​ணுக்​கும் தனித்​தனி​யாக கர்பா பந்​தல் அமைக்க அம் மாநில பாஜக தலை​வர் மதன் ரத்​தோர் ஆலோ​சனை வழங்​கி​யுள்​ளார். இதற்கு மாநில கல்வி அமைச்​சர் மதன் தில்​வார் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். இது​போன்ற கோரிக்​கைகளை வலி​யுறுத்தி உ.பி.​யின் கான்​பூரில், விஎச்​பி, பஜ்ரங் தளம் சார்​பில் மாநகர காவல் ஆணை​யர் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யரிடம் மனு அளித்​துள்​ளனர்.

இதுகுறித்து சிவசேனா (உத்​தவ்) எம்​.பி. சஞ்​சய் ராவத் கூறுகை​யில், “நாட்​டில் வகுப்​பு​வாத சூழலை உரு​வாக்க முயற்​சிகள் நடை​பெறுகின்​றன. இது அனைத்து மதத்​தினரின் வாழ்​வா​தா​ரம். இந்த வகை​யான விஷம் மகா​ராஷ்டி​ரா​வுக்கோ அல்​லது நாட்​டுக்கோ நல்​லதல்ல” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.