போலி ஓவியங்களை விற்றதாக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்

மும்பை: மும்​பையைச் சேர்ந்த வழக்​கறிஞர் விஸ்​வாங் தேசாய். இவரது நண்​பர் ராஜேஷ் ராஜ்​பால், அரிய ​வகை ஓவி​யங்​களை விற்​கும் ஆர்ட் இந்​தியா இன்​டர்​நேஷனல் என்ற கடையை நடத்​துகிறார். விஸ்​வாங் தேசாய்க்கு தொழில​திபர் புனீத் பாட்​டியா வுடன் பழக்​கம் ஏற்​பட்​டது.

ஓவி​யங்​கள் சேகரிப்​பில் தனக்கு 25 ஆண்​டு​கள் அனுபவம் உள்​ள​தாக கூறி, புனீத் பாட்​டி​யாவை கலை​யில் முதலீடு செய்​யும்​படி தேசாய் தூண்​டி​யுள்​ளார். மத்​தி​யப் பிரதேச மகா​ராஜா ஒரு​வர் வைத்​திருந்த ஓவி​யங்​கள் தனக்கு தெரிந்த ஒரு​வரிடம் உள்​ளது எனவும் கூறி​யுள்​ளார்.

இதனால் கடந்த 2022-ம் ஆண்டு பிரபல ஓவியர்​கள் மன்​ஜித் பாவா, எம்​.எப். உசைன், எஸ்​.எச்​.ரசா மற்​றும் எப்​.என் செளசா ஆகியோர் வரைந்​த​தாக கூறப்​படும் பழைய ஓவி​யங்​களை ரூ.17.90 கோடிக்கு வாங்​கி​யுள்​ளார்.

இந்த ஓவி​யங்​கள் எல்​லாம் பலரிடம் இருந்து மோசடி​யாக வாங்​கப்​பட்​ட​வை. இவை அனைத்​தும் போலி ஓவி​யங்​கள் என பின்​னர் தெரிந்​தது. இதுதொடர்​பாக தேசாய், ராஜேஷ் ராஜ்​பால், அபிஷேக் ஜெயின், மணீஷ் சகாரியா உட்பட 5 பேர் மீது அமலாக்​கத்​துறை வழக்​குப்​ப​திவு செய்து மும்பை நீதி​மன்​றத்​தில்​ குற்​றப்​பத்​திரி​கை தாக்​கல்​ செய்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.