‘சாதிவாரி கணக்கெடுப்பை சமூக நீதி கணக்கெடுப்பு என்று அழைக்கலாம்’ – அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல்,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அதை ‘சமூக நீதி கணக்கெடுப்பு’ என்று அழைக்கவும்.

மூன்று லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு, ரூ.500 கோடி பட்ஜெட்டில், சுமார் 2 மாத காலத்தில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இது சாதி அல்லது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல, மாறாக சமூக நீதி தொடர்பான விஷயம். தி.மு.க.வின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.