துபாய்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அனுபவ ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சிவம் துபே அணியில் இடம்பெற்றுள்ளார். அதுபோல ரிங்கு சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
Related Tags :