கரூர்: விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு – தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது.

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி, இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தினால், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை திரும்புவதற்காக திருச்சி சென்ற விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.