ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் கூறிய​தாவது: ரஷ்ய ராணுவத்​தில் சுமார் 27 இந்​தி​யர்​கள் உள்​ளனர். அவர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு சார்​பில் ரஷ்​யா​விடம் வலி​யுறுத்​தப்​பட்டு உள்​ளது. ரஷ்ய ராணுவத்​தில் இருக்​கும் இந்​திய வீரர்​களின் குடும்​பங்​களிடம் நாங்​கள் தொடர்ந்து தொடர்​பில் உள்​ளோம். ரஷ்ய ராணுவத்​தில் சேரும்​படி யார் அழைப்பு விடுத்​தா​லும் அதை நிராகரிக்க வேண்​டு​கிறோம்.இவ்​வாறு ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் தெரி​வித்​தார்.

இந்த விவ​காரம் தொடர்​பாக ரஷ்ய ராணுவத்​தில் இருந்து இந்​தியா திரும்​பிய வீரர்​கள் கூறிய​தாவது: சில ஏஜெண்​டு​கள் இந்​திய மாணவர்​களிடம் ஆசை வார்த்தை கூறி ரஷ்ய ராணுவத்​தில் சேர்த்து விடு​கின்​றனர். அவர்​களுக்கு 10 நாட்​கள் சிறப்பு பயிற்சி வழங்​கப்​படு​கிறது. இதன்​பிறகு அவர்​கள் போர் முனை​களில் நிறுத்​தப்​படு​கின்​றனர்.

ரஷ்ய ராணுவத்​தில் இணைக்​கப்​பட்ட இந்​திய வீரர்​கள் சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்று கண்​டிப்​புடன் உத்​தர​விடப்​படு​கிறது. இதனால் அவர்​கள் குடும்​பத்​தினரை தொடர்பு கொண்டு பேசுவது​கூட மிக​வும் கடின​மாக உள்​ளது. இலங்​கை, நேபாளம் உள்​ளிட்ட நாடு​களை சேர்ந்​தவர்​களும் ரஷ்ய ராணுவத்​தில்​ உள்​ளனர்​. இவ்​வாறு இந்​திய வீரர்​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.