ஆசிய கோப்பை தோல்விக்கு காரணம் என்ன..? – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பதில்

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா அளித்த பேட்டியில் கூறியதாவது,

இது ஏற்றுக்கொள்ள கடினமான உண்மை. பேட்டிங்கில் நாங்கள் நன்றாக முடிக்க முடியவில்லை. பவுலிங்கில் நாங்கள் எல்லாவற்றையும் கொடுத்தோம். நன்றாக முடித்திருந்தால், கதை வேறாக இருந்திருக்கும். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியவில்லை. அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அதனால்தான் நாங்கள் விரும்பிய ரன்களை அடிக்க முடியவில்லை. எங்கள் பேட்டிங்கை விரைவில் சரிசெய்ய வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக, அற்புதமாக பந்து வீசினார்கள்.

6 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்டது. நாங்கள் ஆட்டத்தை கையில் வைத்திருப்பதாக நினைத்தோம். பவுலர்கள் மிக நன்றாக வீசினார்கள். அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும், ஆனால் பேட்டிங் ஒரு கவலையாக இருந்தது. இந்த ஆசிய கோப்பையில் பயணம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் மிகச் சிறப்பாக போராடினோம். ஒரு அணியாக பெருமை கொள்கிறோம். முன்னோக்கி செல்ல இன்னும் நிறைய இருக்கிறது. நாங்கள் மேம்பட்டு வலுவாக திரும்பி வருவோம் இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.