20 கிலோ எடை குறைத்து ஆளே மாறிய ரோகித் சர்மா.. மெகா பிளான் போடும் ஹிட்மேன்!

Rohit Sharma 20 Kg Weight Loss: இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார். இதனால் அவரை கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்கமுடியாத சூழல் ஏற்பட்டது. 

Add Zee News as a Preferred Source

கேப்டன் பதவி நீக்கம்

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முடிந்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட இருக்கிறது. இதில் ஒருநாள் தொடர்ரில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதற்கான இந்திய அணியை கடந்த வாரம் சனிக்கிழமை அக்டோபர் 04ஆம் தேதி அன்று தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தனர். 

அனுபவம் மிகுந்த வீரரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால்,அவரது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வருகிறதோ என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரோகித் சர்மா, 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்ற பிறகே ஓய்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது ஃபிட்னஸை மேம்படுத்தும் விதமாக அவர் அவர் சுமார் 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். ரோகித் சர்மா கடந்த மூன்று மாதங்களில் இதனை செய்திருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஃபிட்டாக மாறிய ரோகித் சர்மா 

கடந்த சில வருடங்களாகவே ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில், விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் தனது தோற்றத்தை மாற்றி ஃபிட்டாகி இருக்கிறார் ரோகித் சர்மா. 2027 உலகக் கோப்பை வரை இந்திய ஒருநாள் அணியில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், அவர் ஃபிட்டாக இருப்பது அவசியம். அதனை மனதில் வைத்து அவர் இந்த முடிவை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. 

மகிழ்ச்சியில் ரசிகர்கள் 

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தந்தார் ரோகித் சர்மா. அப்போது அவர் புதிய லுக்கில் ஃபிட்டாக காணப்பட்டார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.