பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் இளைஞர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்​த​தாக ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டத்தை சேர்ந்​த மன்​கத் சிங் என்​பவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர்.

இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்​தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்​ணுடன் ஆன்​லைனில் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண் பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்​தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்​படும் ஆளை மயக்கி அவரிட​மிருந்து தகவல்​களை பெறு​வது​தான் இந்த உளவாளி​களின் வேலை​.

அந்த பெண்​ணிடம் மயங்​கிய மன்​கத் சிங், ராஜஸ்​தானில் செயல்​பட்டு வரும் ராணுவ, விமானப்​படை தளங்​கள் தொடர்​பான தகவல்​களை இஷா சர்​மா​விடம் அவர் பகிர்ந்​துள்​ளார். இது தொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்ட ராஜஸ்​தான் போலீ​ஸார் மன்​கத் சிங்கை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.