தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தில் இருந்து தமிழகத்தின் மத்​திய, தென் மாவட்​டங்​களுக்​கும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களுக்​கும் 50-க்​கும் மேற்பட்ட விரைவு ரயில்​கள் நாள்​தோறும் இயக்​கப்​படு​கின்​றன.

இதுத​விர, எழும்​பூர் ரயில் நிலை​யம் வழி​யாக மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதன் காரண​மாக, இந்த நிலை​யத்துக்கு தினசரி ஒரு லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர்.

அதி​லும், பண்​டிகை காலத்​தில், இந்த ரயில் நிலை​யத்​தில் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் அலைமோதும். இந்​நிலை​யில், தீபாவளி பண்டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணிகளுக்​கான பகுதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் உள்பட முக்​கிய ரயில் நிலையங்​களில் பண்​டிகை கால கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், “ஹோல்​டிங் ஏரி​யா” என்ற முயற்​சி​யின் கீழ், பயணிகளுக்கான காத்​திருப்​போர் பகுதி ஏற்​படுத்​தப்​படு​கிறது.

அந்த வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் மின்​விசிறி, பயணி​கள் அமரு​வதற்​கான இருக்​கைகளு​டன் காத் திருப்​போர் பகுதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், ரயில் நிலை​யத்​தின் உட்​பகு​தி​யில் கூட்ட நெரிசலை குறைக்​க முடி​யும்” என்றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.