சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவழை தொடங்கி உள்ள நிலையில், சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் குறித்து கண்காணித்த ஆய்வு செய்ய பொறியாளர்களை நெடுஞ்சாலைத்துறை நியமனம் செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16ந்தேதி தொடங்கிய நிலையில், அன்றுமுதல் தென்மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதையடுத்து, சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் குறித்து கண்காணிக்க 7 தலைமை பொறியாளர்களை நெடுஞ்சாலை துறை நியமித்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் எதிர்வரும் […]
