பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்

கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர்.

இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார்.

அனுஷா​வின் தாயும் வலி​யும் அதே அளவு கூர்​மை​யானது. “தீ​பாவளி விடு​முறைக்கு வந்த எனது மகளை இன்​னும் ஓரிரு நாள் தங்​கு​மாறு கூறினேன். ஆனால் அவள் ஏற்​க​வில்​லை” என்​றார்.

பெங்​களூரு​வில் 5 மாதங்​களுக்கு முன் தனது வாழ்க்​கையை தொடங்​கிய மேக்​நாத்​தும் விபத்​தில் இறந்​தவர்​களில் ஒரு​வர். விபத்​துப் பகு​திக்கு வந்​திருந்த அவரது தாயால் யதார்த்​தத்தை ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்​லை. “எனது மகனுக்கு இப்​படி ஒரு முடிவு ஏற்​பட்​டிருக்க கூடாது. அவன் இல்​லாமல் நான் எப்​படி வாழ்​வேன்” என்று அவர் கதறி​னார்.

தெலங்​கானா அமைச்​சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் கூறுகை​யில், “பேருந்து நிறு​வனம் மற்​றும் ஓட்​டுநர் மட்​டுமே இந்த விபத்​துக்கு காரணம். அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களே இழப்பை ஈடு செய்​ய
வேண்​டும்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.