புதுடெல்லி,
12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
தோல்வி கண்ட புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டியில் தோல்வி காணும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி 2வது தகுதி சுற்றில் புனேரி பால்டனை சந்திக்கும். இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.