மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி

சென்னை: தமிழகம் முழு​வதும் மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்கு மனஅழுத்​தத்​தைப் போக்​கு​வதற்​கான பயிற்​சிக்கு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்​கி​யம் மற்​றும் நல்​வாழ்​வுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் தமிழகத்​தின் 37 மாவட்​டங்​களி​லும் உள்ள 388 வட்​டாரங்​கள், 12,525 ஊராட்​சிகளில் உள்ள 3.31 லட்​சம் மகளிர் சுயஉதவிக் குழு பிர​தி​நி​தி​களுக்​கும், 16,562 பள்​ளி​கள், 1,602 கல்​லூரி​களில் பயிலும் மாணவ, மாணவி​களுக்​கும் மனநலம் மற்​றும் போதைப்​பொருள் பயன்​பாட்​டுக்குஎதிரான விழிப்​புணர்வு பயிற்சிகளை வழங்கி வரு​கிறது.

இதில் மனநலம் மற்​றும் மனநோய், மனநல கோளாறுகள், தற்​கொலை தடுப்​பு, கட்​டுக்​கதைகள் மற்​றும் தவறான கருத்​துகள், சமூக மனநலம், மனநலம் தொடர்​பான சட்​டம் மற்​றும் திட்​டங்​கள், போதைப்​பொருட்​களை பயன்​படுத்​து​வ​தால் ஏற்​படும் தீய விளைவு​கள் பற்றி விளக்​கம் அளிக்​கப்படும். மேலும், வளரிளம் பெண்​கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் முதி​யோருக்​கான மனநல இடை​யீடு​கள் குறித்​தும் பயிற்​சி​யில் விளக்​கமளிக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.