சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்களை வழிமறித்த காட்டு யானை.. கார்களை பள்ளத்தில் தள்ளிய காட்சிகள்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையில் கொண்டிருந்த இரண்டு கார்களை திடீரென வழிமறித்த காட்டு யானை, இரு கார்களையும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தள்ளியதில் காரில் பயணித்த 3 பேர் காயங்களுடன்யிர் தப்பினர்.

நவமலை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் அவரது உறவினர்கள் இருவரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கி இரு கார்களில் சென்றுள்ளனர். வால்பாறை சாலையில் சென்ற போது அங்கு சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று திடீரென காரை வழிமறித்துள்ளது.

அச்சமடைந்த சரவணன் காரை பின்னோக்கி இயக்கிய நிலையில், பின்னோக்கியே காரை துரத்திச் சென்ற யானை இரண்டு கார்களையும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தள்ளியது.

அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் யானையை கட்டுக்குள் விரட்டி, காரில் பயணித்த மூவரையும் மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.