தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.84 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.52.28 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.