அய்சால் : வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இரண்டு லாரிகளில் கடத்தி செல்லப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படை யினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
மிசோரமில், முதல்வர் ஸோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அய்சால் மாவட்டத்தில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த தீவிர சோதனையில், கேல்சிஷ் பகுதியில் வந்த இரண்டு லாரிகளை போலீசார் மடக்கினர். அதில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், மூவாயிரம் கிலோ எடையிலான, 24 ஆயிரம், ‘ஜெலட்டின்’ குச்சிகள், 100 கிலோ வெடி மருந்து உட்பட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
லாரியில் இருந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆயுதங்கள், அண்டை நாடான மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என, உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
அய்சால் : வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இரண்டு லாரிகளில் கடத்தி செல்லப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படை யினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.மிசோரமில், முதல்வர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.