பீஜிங்-பாக்., வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, நேற்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
நம் அண்டை நாடான பாக்.,ல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், வெளியுறவு துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி நியமிக்கப்பட்டார். இவர், முன்னாள் பிரதமர் மறைந்த பெனசிர் புட்டோவின் மகன். இந்நிலையில் பிலாவல் புட்டோ, நேற்று சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
குவாங்ஸோ நகரில் நடந்த இந்த சந்திப்பில் முந்தைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் மோசமடைந்த சீனா – பாக்., நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக பேசியதாக பிலாவல் தெரிவித்துள்ளார். சீன பயணம் குறித்து பிலாவல் கூறியதாவது:பாக்., – சீனா இடையிலான துாதரக உறவின் 71வது ஆண்டில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்., – சீனா இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.திருத்தப்பட்ட செய்தி
பீஜிங்-பாக்., வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, நேற்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார். நம் அண்டை நாடான பாக்.,ல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.