ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே அங்கு பொருளாதார நெருக்கடி சூழல் நீடித்துவருகிறது. அது இன்னும் தீர்ந்தபாடில்லை.
Journalists life in #Afghanistan under the #Taliban. Musa Mohammadi worked for years as anchor & reporter in different TV channels, now has no income to fed his family. & sells street food to earn some money. #Afghans suffer unprecedented poverty after the fall of republic. pic.twitter.com/nCTTIbfZN3
— Kabir Haqmal (@Haqmal) June 15, 2022
இது தொடர்பாக கபீர் ஹக்மால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “மூசா முகமது என்பவர் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தியாளராக, நெறியாளராக பணியாற்றியவர். அவருக்கு தற்போது சரியான வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பின் காரணமாக அவர், தெருக்களில் ஏதேனும் உணவுப் பண்டங்களை விற்று பிழைப்பு நடத்துகிறார். குடியரசு ஆட்சி வீழ்ந்த பிறகு ஆப்கன் மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
மூசா முகமதுவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.