காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்..!

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 192 கிலோவும் தூக்கினார். வெண்கல பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.