பறக்கும் ரயிலில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்.. மாணவர்களை அடையாளும் காணும் போலீசார்!

சென்னையில் பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயிலில், பள்ளி மாணவர்கள் சிலர் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிச் சென்று ரயிலில் ஏறிய மாணவர்கள் ஒரு காலை ரயிலில் வைத்துக் கொண்டு, மற்றொரு காலை ரயில் நடைமேடையில் தேய்த்துக் கொண்டே பயணித்துள்ளனர்.

அப்போது நடைமேடையில் நின்றிருந்த ஒரு மாணவன், கால்களை தரையில் தேய்த்த படி ரயிலில் பயணித்த மாணவர்களின் கால்களை தட்டி விட முயன்றுள்ளான்.

சீருடையை வைத்து பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.