குரங்கம்மையை தடுக்க செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: குரங்கம்மை  நோயை தடுப்பது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.  திருச்சூரில்  ஒரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்தார். இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது, நாட்டின் மொத்த குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த நோயை தடுப்பதற்கு செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.* செய்ய வேண்டியவை; செய்ய கூடாதவைபாதிக்கப்பட்ட நோயாளியை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது. சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம். நோய் பாதித்த நோயாளிகளின் அருகில் இருக்கும் போது, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும் நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.