பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

 பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக   கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் உலர் உணவுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் தொடர்பில் நேற்று சில ஊடகங்கள் தெரிவிது;துள்ள உண்மைக்குப்புறம்பான விடங்கள் குறித்து
அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

‘பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது, அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அது ஒரு பிரச்சனை. பிச்சை எடுத்தாவது இந்நாட்டின் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியுமானால் அதை நான் செய்வேன். சில பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.’ ஏன்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.