‛வேட்டையாடு விளையாடு 2' கேட்ட கமல் : கவுதம் சொன்ன பதில்

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கவுதம் மேனன் பல பேட்டிகளில் கூறி உள்ளார். சமீபத்தில் கூட படத்தின் 60 சதவீத கதை பணி முடிந்துவிட்டதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய கமல், ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை என்னிடம் தருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் கூறினார். ஆனால் இன்னும் வரவில்லை என கவுதமிடம் கேட்டார்.

அதற்கு, ‛‛எழுத்தாளர் ஜெயமோகன் தான் ‛வேட்டையாடு விளையாடு 2' படத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார், சீக்கிரம் வரும் சார் என்றார் கவுதம் மேனன். இதை வைத்து பார்க்கையில் விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.