இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்!


இலங்கையிலிருந்து கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்! | Srilanka Economic Crisis Doctors Leaving Country

இலங்கையிலிருந்து வைத்தியர்கள் வெளிநாடு செல்வது பாரதூரமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்! | Srilanka Economic Crisis Doctors Leaving Country

வெளிநாடு செல்லும் வைத்திய நிபுணர்கள்

கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்! | Srilanka Economic Crisis Doctors Leaving Country

இதேவேளை, பதவி விலகலை அறிவித்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வைத்தியர்களின் புலம்பெயர்வு நாட்டின் சுகாதாரத்துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை நாட்டின் அப்பாவி மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.