2024ல் ககன்யான் திட்டம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி :”விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டம், 2024ல் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்,” என, மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய விண்வெளி மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் புதுடில்லியில் நேற்று கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வின் கனவு திட்டங்களில் ஒன்று, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, 2018ல், தன் சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார். தற்போது முழு வீச்சில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.


இதற்கான சோதனை ஓட்டம், இந்தாண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் 2024ல் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.