புதுடில்லி :”விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டம், 2024ல் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்,” என, மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். மத்திய விண்வெளி மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் புதுடில்லியில் நேற்று கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வின் கனவு திட்டங்களில் ஒன்று, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, 2018ல், தன் சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார். தற்போது முழு வீச்சில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
இதற்கான சோதனை ஓட்டம், இந்தாண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் 2024ல் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி :”விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டம், 2024ல் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்,” என, மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். மத்திய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்