மை ஷுகர் சர்க்கரை ஆலை அமைச்சர் கோபாலய்யா உறுதி| Dinamalar

மாண்டியா : ”மாண்டியா மாவட்டத்தின், உயிர் நாடியான மை ஷுகர் சர்க்கரை ஆலையை, மீண்டும் திறக்கும் விஷயத்தில், அரசு சொன்னபடி நடந்து கொண்டுள்ளது,” என கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.மாண்டியாவில், நேற்று அவர் கூறியதாவது:மை ஷுகர் சர்க்கரை ஆலையின் மேம்பாடு தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகவல் பெறப்பட்டுள்ளது.

ஆலையின் முதல் பாய்லர் ஏற்கனவே செயல்பட துவங்கியது. இரண்டாவது பாய்லர், வரும் 19ல் துவங்கப்படும். வரும் 30 முதல், விவசாயிகளிடம் கரும்பு பெற்று, பிழியும் பணிகள் துவங்கப்படும்.கரும்பு கொள்முதல் தாமதமானதால், வேறு ஆலைகள் ஏற்கனவே ஒரு லட்சம் டன் கரும்பை கொள் முதல் செய்துள்ளன. நமது ஆலை 100 சதவீதம் கரும்பை வாங்குவோம். மாண்டியாவின், அனைத்து விவசாயிகளிடம் கரும்பு வாங்குவோம். எங்கள் அரசு சொன்னபடி நடந்து கொண்டது. நிரந்தரமாக ஆலை செயல்பட வேண்டும் என்பது, எங்களின் குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.