சுப்ரீம் கோர்ட்டு அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

டெல்லி,

நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். தற்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ந்தேதி பணி நிறைவு செய்கிறார்.

இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். டி.ஒய். சந்திரசூட்டை சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று காலை 11 மணியளவில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்புகிறார்.

ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்து மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் நவம்பர் 9-ந் தேதி, நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதிகாக வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.