வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு வீழவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுகிறது எனக்கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.82.69 என்றளவிற்கு குறைந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே நான் கூறுவேன். ரிசர்வ் வங்கி, ரூபாயின் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டாலர் வலுப்பெறும் சூழல் உலகளவில் மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு உறுதியாக இருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில் மற்ற எல்லா நாணயங்களையும் விட சந்தை மாற்றங்களை இந்திய ரூபாய் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

அமலாக்கத்துறை விசாரணை
நிருபர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் கூறுகையில், அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. பொருளாதார குற்றங்களை கையாளும் அமைப்பு அது. விசாரணை அமைப்புகள் அதன் கடமைகளை செய்கின்றன. யாரையும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எந்த ஒரு விசாரணையிலும் எடுத்த உடனேயே அமலாக்கத்துறை வருவதில்லை. ஒரு சோதனையில் கிடைக்கும் பணம், பொருள் ஆகியவற்றின் தன்மை, அளவை பொருத்தே அமலாக்கத்துறை தலையிடுகிறது. சில சோதனைகளில் கிடைக்கும் பணத்தின் அளவை ஊடகங்களே காட்டுகின்றன. அப்படியிருக்கும் போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து தானே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement