குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை… உடனே டிஸ்சார்ஜ்!

இந்தியாவின் 15 ஆவது தலைவராக கடந்த ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்று கொண்டார் திரெளபதி முர்மு. நாட்டின் முதல் பழங்குடியினத்தை சேர்த்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

காலை 11:30 மணிக்கு அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்ட நிலையில், மதியம் 1:30 மணி அளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

எஸ்.கே.மிஸ்ரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.