உக்ரைன் -ரஷியா இடையே கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருவதன் விளைவாக ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
இதனையடுத்து உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.
ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!
இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நெகிழ்ச்சிகரமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் மாஸ்கோவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் பங்கேற்ற அவர்கள், தங்களது காதல் ஜோடியை மகிழ்ச்சியுடன் கரம் பிடித்தனர். போருக்கு செல்வதற்கு முன் தங்களை கரம் பிடித்த ராணுவ வீரர்களான தங்களின் காதலர்கை ஆரதழுவிய புதுமண பெண்கள் ஆனந்த கண்ணீர் சிந்திய காட்சி காண்போரையும் கண்கலங்க செய்தது.