பெற்றோலிய தொழிற்சங்கத்தினரின் சுகயீன விடுமுறை முடிவு

சுகயீன விடுமுறையுடன் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் நேற்று (19) முதல் வழமை போன்று தமது பணிகளில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய உற்பத்தி தொடர்பான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையில் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கொலன்னாவ, முத்துராஜவெல முனையங்கள் மற்றும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் இருந்து எரிபொருட்களை விநியோகிக்கும்; பணி (18) தடைப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நேற்று முதல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று பெற்றோலிய பொது சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.