தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படை: இரு குண்டுகள் பாய்ந்தன!

மன்னார் வளைகுடா பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச்சேர்ந்த மீனவர்கள் சுமார் 10 பேர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விசைப்படகில் மீன் பிடிக்க வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், எல்லை தாண்டி சென்ற மீனவர்கள் படகை நிறுத்த கோரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியாக கூறப்படுகிறது.

இதில் படகில் இருந்த மயிலாடுதுறை வானகிரி பகுதியைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் வீரவேல்(32) மீது வயிறு மற்றும் தொடை பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளது.

இதனை அடுத்து அவரை இந்திய கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.

அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீதே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.