இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5G வசதி அடங்கிய பொது WiFi வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவையை அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு இந்தியா முழுவதும் 5g சேவையை வழங்கிவருகின்றன.
Whatsapp செயலியில் புதிய Call Link வசதி அறிமுகம்! இனி அதிகம் நபர்களுடன் பேசலாம்!
இந்த பொதுமக்கள் பயன்படுத்தும் 5G WiFI மூலம் 1GB/நொடி அளவில் முடிவில்லாத 5G டேட்டா பயன்படுத்தமுடியும். இதுகுறித்து பேசிய ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி “இன்று இந்தியாவின் உண்மையான 5G வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் WiFi வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுள் ஸ்ரீநாத் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.
இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5G சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.அந்த நிறுவனம் பொதுமக்கள் அதிகம் புழங்கும் ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தளங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் இதனை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
5G Network மூலம் இந்தியாவில் கல்வி அடுத்த லெவல் செல்லும்! பிரதமர் நரேந்திர மோடி
ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 5G சேவையை வரும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. “முன்பு கூறியதை போலவே இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் முதல்கட்டமாகவும் பின்னர் அனைத்து இடங்களுக்கும், அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஜியோ 5G சேவை வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்