பிரிட்டன் பிரதமர் தேர்தல்: மறுபிரவேசம் எடுக்கும் போரிஸ் ஜான்சன்?

பிரிட்டன் பிரதமர் தேர்தலில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் மீது ஆளுங்கட்சி எம்பிக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே பிரிட்டன் நாட்டின் பிரதமராக ஆக முடியும் என்பதால், தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இறுதி கட்டத்திற்கு முன்னேறினர். இதில், லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் இவர் பதவி ஏற்ற சிறிது காலத்திற்குள்ளேயே நாட்டின் பொருளாதார மந்த நிலை அடைந்ததை அடுத்து பிரிட்டன் பதவியை ராஜினாமா செய்தார். சுமார் 45 நாட்கள் மட்டுமே இவர் பிரதமராக பதவி வகித்தார்.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தத் தேர்தலில் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விடுமுறையில் இருந்த அவர், தனது பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, பிரிட்டன் நாட்டிற்கு திரும்பி உள்ளார்.

பேரழிவுக்கான திட்டம் தீட்டும் ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு!

இதற்கிடையே பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப், போரிஸ் ஜான்சன் போட்டியிடுவதை எதிர்த்துள்ளார். அவர் கூறுகையில், “நாம் முன்னோக்கி செல்ல வேண்டும், பின்னோக்கி செல்லக்கூடாது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பொருளாதார அனுபவம் வாய்ந்த தனித்துவமான வேட்பாளர்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.