10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்; திருப்பதி கோயில் செம அறிவிப்பு!

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ருத்ரதாண்டவம் ஆடியது. இதை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இதன் ஒரு பகுதியாக திருப்பதி திருமலை தேவஸ்தானமும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியது. இதையடுத்து பிரம்மோற்சவ விழாவில் சில பூஜைகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் விழா 2022 வழக்கமான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சசிகலாவை சிக்க வைத்த சாட்சி; உறவினரே வீழ்த்தியது அம்பலம்!

வழக்கமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம்தோறும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.

மேலும், ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் இலவச தரிசனம் செய்து வருகின்றனர். இதன் மூலம், நாள்தோறும் 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியலை விட்டு விலகும் எடப்பாடி?; அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!

ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிவதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது.

அந்தவகையில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் 26ம் தேதி காலை 10 மணி அளவில் தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

நாள்தோறும் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட் வெளியிடப்படுகிறது. மறு நாளில் 27ம் தேதி விடுதி அறைகளை ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.