பணத்தை வட்டிக்கு விடும் பள்ளி தலைமை ஆசிரியை… என்ன இதுவென அரசை கேட்கும் கோர்ட்!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை, கிராமத்தினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். மேலும் அவரிடம் கடன் வாங்கியவர்களின் பிள்ளைகளான அந்த பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவியரை அவர் பல வழிகளில் தண்டிக்கிறார்.

எனவே, தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்‌.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.